பெரம்பலூரிலிருந்து பிரித்து மங்களமேட்டில் புதிய டிஎஸ்பி அலுவலகம்
பெரம்பலூரிலிருந்து பிரித்து மங்களமேட்டில் புதிய டிஎஸ்பி அலுவலகம்
பெரம்பலூர், : பெரம்பலூரிலிருந்து பிரித்து மங்களமேட்டில் புதிய டிஎஸ்பி அலுவலகம் அமைக்கப்படுகிறது. புதிய டிஎஸ்பியாக இன்ஸ்பெக்டராக இருந்து பதவி உயர்வு பெற்ற கோவிந்தராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே ஒரு டிஎஸ்பி அலுவலகம் மட்டும் இருந்து வந்தது. இதன் கீழ் இன்ஸ்பெக்டர் தலைமையில் பெரம்பலூர், குன்னம், பாடாலூர், அரும்பாவூர், மங்களமேடு ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களும், எஸ்ஐ தலைமையில் கை.களத்தூர், வி.களத்தூர், மருவத்தூர் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களும் உள்ளன.
ங்களமேட்டை தலைமையிடமாக கொண்டு புதிய டிஎஸ்பி அலுவலகம் அமைக்கப்படும் என கடந்த 3 மாதத்துக்கு முன் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால் அதன்பின் இத்திட்டம் கிடப்பிலேயே இருந்தது.
இந்நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் 172 இன்ஸ்பெக்டர்கள் டிஎஸ்பிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதையடுத்து தற்போது மங்களமேட்டை தலைமையிடமாக கொண்டு புதிய டிஎஸ்பி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு திருச்சி மாவட்டம் ராம்ஜிநகரில் இன்ஸ்பெக்டராக இருந்து, பதவி உயர்வு பெற்ற கோவிந்தராஜன் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த டிஎஸ்பி சரகத்தின் கீழ் மங்களமேடு, குன்னம் கை.களத்தூர், வி.களத்தூர் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்கள் வரும் என்று தெரிகிறது.
Thanks
Dinakaran