My Blogger TricksAll Blogger TricksTechtunes
Preview
ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 055-4481405, 055-3873002 , 050-8486296

ஓதிடும் மவ்லிது வரிகளும்! மோதிடும் குர்ஆன் வசனங்களும்!


ஓதிடும் மவ்லிது வரிகளும்! மோதிடும் குர்ஆன் வசனங்களும்!

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹூதஆலா தன் திருமறையில்...

இவருக்கு (முஹம்மதுக்கு) கவிதையை நாம் கற்றுத் தரவில்லை.(அது)அவருக்கு தேவையுமில்லை.(அல்குர்ஆன்: 36:69)  

உங்களில் ஒருவருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதை விட சீழ்சலத்தால்   நிரம்பியிருப்பது  நன்று (புகாரீ 6154, முஸ்லிம்-4191)



ஓதிடும் மவ்லிது வரிகள்:

    اَلسَّلاَمُ عَلَيْكَ يَا جَالِي الْكُرُوْبِ السَّلام عَلَيْكَ يَا مَاحِي الذُّنُوْب

பாவங்களை அழிப்பவரே! உங்கள் மீது ஸலாம்! கவலைகளை அகற்றுபவரே! உங்கள் மீது ஸலாம்!

اَنْتَ غَفَّارُ الْخَطَايَا   وَالذُّنُوْبِ الْمُوْبِقَاتِ

குற்றங்கள் மன்னிப்பது தாங்களன்றோ, அழிவேற்படுத்தும் பாவங்களை மன்னிப்பது தாங்களன்றோ,

كَفِّرُوْا عَنِّيْ ذُوْنُبِيْ    وَاعْفُ لِيْ عَنْ سَيِّئَاتِ

என்னில் நிகழும் பெரும் பிழைகள் யாவையும் மன்னித் தருள்வீரே!சின்னஞ்சிறிய தீமைகளை சீராய் பொறுத்தருள்புரிவரே!

يَا مَنْ تَمَادى وَاجْتَرَمْ      تُبْ وَاعْتَرِفْ وَارْجُ الْكَرَمْ
وَلُذْ بِمَنْ حَلَّ الْحَرَمْ    وَنُوْرُهُ عَمَّ الْبِلاَدِ

பாவத்தில் நீடித்திருப்பனே!குற்றம் இழைத்து விட்டவனே! நீ பாவமன்னிப்புக் கேள்! உன் குற்றத்தை ஒப்புக் கொள்! நபியின் கொடைத்தன்மையை எதிர்பார்த்துக் கொள். புனிதம் மிக்க ஹரம் ஷரீபின் பொன்னடி பதித்த பூமான் நபியிடம் புகலிடம் தேடிக்கொள்.அவர்களின் பேரொளி அனைத்து நாடுகளையும் பொதுவாகச் சூழ்ந்து கொண்டது.

حُبُّكُمْ فِيْ قَلْبِنَا مَحْوٌ   مِنْ رَّئِيْنَ الذَّنْبِ وَالْحَرَجِ
صَبُّكُمْ وَاللهِ لَمْ يَخِبِ   لِكَمَالِ الْحُسَنِ وَالْبَهَجِ

தங்களின்பால் நாங்கள் வைத்திருக்கும் நேசம் எங்களின் இதயத்திலிருக்கிறது. இது எங்களின் பாவக் கறைகளி லிருந்தும் குற்றத்திலிருந்தும் உள்ளவற்றை அழித்துவிடும். தங்களின் நேசன் முழுமையான அழகையும் ஒளியையும் பெறுகிற காரணத்தால் அல்லாஹ் மீது சத்தியமாக அவர் இழப்பினை அடையவில்லை.

மோதிடும் குர்ஆன் வசனங்கள்: 

ஆனால் அல்லாஹூதஆலா தன்னுடைய திருமறையில், பாவங்களை மன்னிப்பவன் யார் என்பதை அழகாக சொல்லிக் காட்டுகிறான்.  

அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? (அல்குர்ஆன்: 3:135) 

மேலும், தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள். அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையோன் என்று தெரிவிப்பீராக! (அல்குர்ஆன் 39:53) 

ஓதிடும் மவ்லிது வரிகள்:

اَنِّيْ عُبَيْدٌ ذَلِيْلٌ     مِنْ عَثْرَتِيْ اَسْتَقِيْلُ
وَمَا يَخِيْبُ النَّزِيْلُ     فِيْ حَيِّ رَاعِ الذَّمَامِ

நிச்சயமாக  நான்  இழிவான ஒரு சிற்றடிமையாவேன். என் குற்றங்களிலிருந்து என்னை நீக்கி விடக் கோருகிறேன். பொறுப்புகளைப் பேணுகிற பூமான் நபியின் குழுவில் இறங்கியவர் வீணாகி விடமாட்டார்.

اَلشَّافِعُ الْمُنْقِذِ مِنْ مَهَالِكِ َآلِهِ وَصَحْبِهِ وَمَنْ هُدِيَ

அழிவுகளிலிருந்து காப்பாற்றுகிறவரும் மன்றாடுகிறவருமான  நபியவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார், தோழர்கள் மற்றும் நேர்வழியாக்கப்பட்டவர்கள் மீதும் ஸலவாத்துச் சொல்லுங்கள்!

صَلَوَاتُ اللهِ عَلى الْمَهْدِيْ وَمُغِيْثُ النَّاسِ مِنَ الْوَهَجِ

வழிகாட்டப்பட்டவரும் வாட்டும் நரக நெருப்பிலிருந்து மக்களைக் காப்பாற்று வோருமான நபி(ஸல்) மீது அல்லாஹ்வின் ஸலவாத் உண்டாகுக!

மேலேயுள்ள மௌலீத் வரிகள் முஸ்லீம் சமுதாயத்தை நரகின் விளிம்பில் கொண்டுபோய் நிறுத்தியுள்ளது. ஆனால் அல்லாஹூதஆலா நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு இந்த தகுதி இல்லை என்று கூறுகின்றான்.

மோதிடும் குர்ஆன் வசனங்கள்: 

அல்லாஹ்வையன்றி உதவி செய்யும் பாதுகாவலர்கள் எவரும் அவர்களுக்கு இல்லை. அல்லாஹ் யாரை வழி கேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு எந்த வழியும் இல்லை. (அல்குர்ஆன் 42:46)

நான் ''அல்லாஹ்வை மறுத்து எனக்கு அறிவில்லாத ஒன்றை அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்க வேண்டும்'' என்று என்னை அழைக்கிறீர்கள். நானோ உங்களை மிகைத்தவனாகிய மன்னிப்பவனிடம் அழைக்கிறேன். (அல்குர்ஆன் 40:42)

ஓதிடும் மவ்லிது வரிகள்:

اِنِّيْ اِذَا مَسَنِّيْ ضَيْمٌ يُرَوِّعُنِيْ اَقُوْلُ يَا سَيِّدَ السَّادَاتِ يَا سَنَدِيْ     

என்னை நடுங்கச் செய்துவிடும் ஏதேனும் பேரிடர்கள் என்னைத் தீண்டும் வேளையிலே இன்னுதவி கேட்டவனாய் அனைத்துலகத் தலைவர்க்கெல்லாம் அருந்தலைவர் ஆனவரே! இணையில்லா என்னிணைப்பே!''என்றுரைப்பேன்.

اَنْتَ حَقًّا غِيَاثُ الْخَلْقِ اَجْمَعِهِمْ

மெய்யாகப்படைப்புக்கெல்லாம் மெய்க்காவல் தாங்கள்தான்!

ضَاقَتْ بِيَ اْلاَسْبَابْ      فَجِئْتُ هذَا الْبَابْ
اُقَبِّلُ اْلاَعْتَابْ        اَبْغِيْ رِضَا اْلاَحْبَابْ
وَالسَّادَةُ اْلاَخْيَارِ

எனக்குக் காரணங்கள் (உபாயங்கள்) நெருக்கடியாகி விட்டன.எனவே நபியே தங்களின் இந்த வாசலுக்கு நான் வந்துவிட்டேன்.தங்களின் வாசலின் இந்தப் படிகளை முத்தமிடுகிறேன்.நேசர்கள் உடையவும், நல்லவர்களான தலைவர்கள் உடையவும், பொருத்தத்தை தேடுகிறேன்.

மோதிடும் குர்ஆன் வசனங்கள்: 

ஆனால் திருமறை கூறுகிறது:

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உனக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 10:107)

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும், அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பாதுகாவலனோ, உதவுபவனோ இல்லை என்பதையும் நீர் அறியவில்லையா?(அல்குர்ஆன் 2:107)

ஓதிடும் மவ்லிது வரிகள்:

فَرَوِّحُوْا رُوْحِيْ بِكَشْفِ الْكُرَبِ عِنَايَةً مِنْ فَضْلِكُمْ مُعْتَمَدِيْ

எனவே, என் கவலையை அகற்றுவதன் மூலமாக என் ஆன்மாவை நிம்மதியுறச் செய்வீராக! என்னால் பற்றி நிற்கப் படுவதற்குரிய நபியே! தங்களின் அருட்கொடையிலிருந்து நான் நாடுகிறேன்.

قَدْ فُقْتُمُ الْخَلْقَ بِحُسْنِ الْخُلُقِ فَاَنْجِدُوا الْمِسْكِيْنَ قَبْلَ الْغَرَقِ      

அழகிய நற்குணங்களின் மூலமாகத் தாங்கள் நிச்சயமாக படைப்பினங்களை  விட மேம்பட்டு விட்டீர்கள். எனவே நான், கவலையில் மூழ்குவதற்கு முன்னரே இந்த ஏழையைக் காப்பாற்றுங்கள்.

பொருளுக்கும் உடமையாளர்களாக இல்லாமலும், விளங்காதும் இருந்தாலுமா? என்று கேட்பீராக! ''பரிந்துரைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே'' என்று கூறுவீராக! வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது! பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 39:43,44)

நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான். (அல்குர்ஆன் 26:80)

أَذْهِبْ الْبَاسَ رَبَّ النَّاسِ اشْفِ وَأَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا (البخاري -5675

மனிதர்களைப் படைத்து பராமரிப்பவனே! நோயைப் போக்கி அறவே நோய் இல்லாதவாறு குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை என்று நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். : புகாரீ(5675)

ஓதிடும் மவ்லிது வரிகள்:

اَنْتَ مُنْجِيْنَا مِنَ الْحُرَقِ   مِنْ لَهِيْبِ النَّارِ وَاْلاَجَجِ
ذَنْبُنَا مَاحِيْ لَيْمَنَعُنَا     مِنْ ذُرُوْفِ الدَّمَعِ وَالْعَجَجِ

நரக நெருப்பின் ஜூவாலையினாலும் அதன் கடும் வெப்பத்தினாலும் கரிந்து போகாமல் எங்களைக் காப்பாற்றுவது தாங்களே ஆவீர்! எங்களின் பாவங்களை அழிப்பவரே! தாங்கள் பாவங்களை அழிப்பது எங்களை கண்ணீர் வடிப்பதிலிருந்தும், கதறுவதிலிருந்தும் தடுத்துவிடும்.

وَاَطْفِؤُا بِالْبَسْطِ وَهْجَ الْحُرَقِ  وَاَبْرِدُوْا بِاللُّطْفِ حَرَّ الْكَبِدِ

நபியே! தங்களின் பரந்த மனப்பான்மையினால் கரிக்கும் நரக நெருப்பின் கொழுந்து விட்டெரியும் ஜூவாலையை அணைத்து விடுங்கள்! தங்களின் இரக்கத் தன்மையால் என் ஈரலின் வெப்பத்தைக் குளிரச் செய்யுங்கள்.

عَالِمُ سِرٍّ وَأَخْفى   مُتْسَجِيْبُ الدَّعَوَاتِ

அகமிய ரகசியம் அறிபவரே!ஆழிய மர்மம் அறிபவரே! அகமுணர்ந்திரங்கும் இறைஞ்சல்களை அன்பாய் ஏற்றுக் கொள்பவரே!

மோதிடும் குர்ஆன் வசனங்கள்: 

யாருக்கு எதிராக வேதனை பற்றிய கட்டளை உறுதியாகி விட்டதோ அவனா? (சொர்க்கம் செல்வான்?). நரகத்தில் உள்ளவனை நீர் விடுவிப்பீரா? (அல்குர்ஆன் 39:19)

வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள் என்று கூறுவீராக! . (அல்குர்ஆன் 27:65)

அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அல்குர்ஆன் 7:188)

இந்த அளவுக்கு இஸ்லத்தை விட்டு வெளியேறற்றக் கூடியதும்,அல்லாஹ்வின் சாபத்தை பெற்றுத் தரவல்லது தான் இந்த மவ்லீது வரிகள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

மேலும்,  ஆகவே அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத்தரும் மவ்லிதுகளை விட்டுவிட்டு அவனது அருளை அள்ளித்தரும் ஸலவாத்தைக் கூறுவோம்.அளப்பரிய நன்மைகளை அடைவோம்.

தேதி : 18.01.2013                                                    வெளியீடு : 03/13  

அன்புடன் வெளியிடுவோர்... 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
 துபை மண்டலம்.

மாவட்ட நிர்வாகிகள்!


----------------------------------------------------
மாவட்டத்தலைவர்
அஷ்ரப் அலி - 9894819930
புதுஆத்தூர்
----------------------------------------------------
மாவட்டதுணை தலைவர்
ஜாஹிர் ஹுசைன் - 9677353392
லெப்பைக்குடிக்காடு
----------------------------------------------------
மாவட்ட செயலாளர்
சபீர் அலி - 9943509442
V களத்தூர்
----------------------------------------------------
மாவட்ட துணை செயலாளர்
ராஜ் முஹம்மது - 9994328213
பெரம்பலூர்
----------------------------------------------------
மாவட்ட பொருளாளர்
ஷேக் தாவூத் - 9655461134
லெப்பைக்குடிக்காடு
----------------------------------------------------

UAE நிர்வாகிகள்!

தலைவர்
A.முஹம்மதுயாகூப்
00971 50 7890713
--------------------------------------
செயலாளர்
A.சபியுல்லாஹ்
00971504758106
--------------------------------------
பொருளாளர்
M.ஜாஹிர்உசேன்
00971 50 5301352
--------------------------------------

VKRகிளைநிர்வாகிகள்

தலைவர்
K.G.அஹமதுபாஷா
9843044145
--------------------------------------
துணை தலைவர்
A.முஹம்மது அலி
--------------------------------------
செயலாளர்
A.முஹம்மது இப்ராஹீம்
--------------------------------------
துணை செயலாளர்
இனையத்துள்ள
--------------------------------------
பொருளாளர்
அப்துல் ஜப்பார்
--------------------------------------
தொன்டர் அனி
M.ஜியவுல் ஹக்
--------------------------------------
மானவர் அனி
K.ஜாசிம் ரசூல்
--------------------------------------

தொடர்பு கொள்ள








Powered by vkalathurtntj.tk



© Copyright 2014. TNTJ VKR. All Rights Reserved. -- Designed by: TNTJ VKR -- Powered by the TNTJ V.KALATHUR