மானியவிலை சிலிண்டர்
மானியவிலை சிலிண்டர் எண்ணிக்கையை 6லிருந்து 9ஆக உயர்த்த முடிவு
புதுடெல்லி: பொதுமக்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர் எண்ணிக்கையை 6-ல் இருந்து 9 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து மானிய விலை சிலிண்டர்கள் எண்ணிக்கை 9ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்தார். மூன்று மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த அறவிப்பை வெளியிட தேர்தல் ஆணையத்திடமிருந்து அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
Thanks
Diankaran