குர்ஆன் விளக்க உரை - சோனாப்பூர் கிளை
குர்ஆன் விளக்க உரை - சோனாப்பூர் கிளை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ் பேசும் முஸ்லிம்களிடம் தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் ஏகத்துவ கொள்கையை தூய முறையில் எடுத்துச் சொல்லி வருகிறது. அதன் கிளையாக செயல்படும் துபாய் மண்டலம் துபையில் மார்க்கம் மற்றும் சமுதாயப் பணிகளை பல்வேறு பகுதிகளில் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறது.இதனால் துபாயில் பல்வேறு பகுதிகளில் ஏகத்துவ கொள்கை விரிவடைந்து கொண்டே செல்கிறது. அந்த வகையில் புதியதாக சோனாப்பூர் ETA HRM கேம்ப்பில் 19.05.13 அன்று குர்ஆன் விளக்க உரை நடைபெற்றது. இதில் அந்த கேம்ப்பின் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.