மாதாந்திர அமர்வு - மார்ச் 2013
மாதாந்திர அமர்வு - மார்ச் 2013
Tuesday, March 05, 2013 | துபாய் , துபை , மாதாந்திர அமர்வு , வளைகுடா பகுதி
ஏக நாயன் அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் லெப்பைக்குடிக்காடு ஊர் கூட்டமைப்பின் வழமையான மாதாந்திர அமர்வின் மார்ச் மாத அமர்வு 01/03/2013 வெள்ளிக்கிழமை மஃரிப் முதல் இஷா வரை துபை மண்டல TNTJ தலைமை மர்கஸில் சிறப்புடன் நடைப்பெற்றது.
சகோதரர் A.அப்துல் மஜீது அவர்களுடைய தலைமையில் அமர்வு துவங்கியது.
தொடர்ந்து அமீரக அழைப்பாளரும், ஊர் கூட்டமைப்பின் பொறுப்பாளருமான சகோதரர் P.A.முஹைய்யத்தீன் பாஷா அவர்கள் நற்பண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அதனைத் தொடர்ந்து கடந்த ஒரு மாத கால செயல்பாட்டு அறிக்கையை ஊர் கூட்டமைப்பின் பொறுப்பாளர் சகோ.S.ஹிதாயத்துல்லாஹ் அவர்களால் வாசிக்கப்பட்டது.
இதில் தாயகத்தில் கடந்த ஒரு மாதத்தில் நடைப்பெற்ற காரியங்களான ஜூம்ஆ உரைகள், தெருமுனைப் பிரச்சாரம், வாராந்திர நோட்டீஸ், மார்க்கவிளக்க வகுப்புகள், மாவட்ட செயல்பாடுகள், மாவட்டத்தின் பிற கிளைகளின் செயல்பாடுகள் மற்றும் சமுதாய நிகழ்வுகள் அனைத்தும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஊரில் மறு சீரமைப்புடன் நடைபெற்றுவரும் வட்டியில்லா கடன் திட்டம் குறித்தும் (சேமிப்பு திட்டம் + வைப்புநிதி திட்டம்) இத்திட்டத்தில் கொள்கை சகோதரர்கள் அனைவரும் கலந்துக்கொண்டு பயன்பெறும்படியும் அழைப்பு விடுத்தார்.
மேலும் அமீரகத்தில் வட்டி இல்லா கடன் திட்டத்தின் மூலம் தேவையுள்ள, விண்ணப்பித்த சகோதரர்கள் அனைவருக்கும் கடன் உதவிகள் செய்யப்பட்டு அவர்களின் பொருளாதார தேவைகள் சரிசெய்யப்பட்டது.
சன்மார்க்கப் பணிகளிலும், சமுதாயப்பணிகளிலும் சமுதாயத்தின் பெயரால் இருக்கும் மற்ற அமைப்புகளைக் காட்டிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இறையருளால் எந்த அளவுக்கு தனித்துவம்மிக்கதாக விளங்குகிறது என்ற விளக்கம் கொள்கைச் சகோதரர் எழுப்பிய கேள்விக்கு பதிலாக தரப்பட்டது.
சகோ K.A.சையது முஸ்தபா அவர்கள் தாருஸ்ஸலாம் நர்ஸரிப்பள்ளியில் தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களின் பங்குக்கான முறையான பதில் இதுவரை சொல்லாமல் 1 வருடத்திற்கும் மேலாக காலம் தாழ்த்தி வருவதை பற்றி வேதனையுடன் குறிப்பிட்டார்.
இவைகளையெல்லாம் சகோதரர்களிடம் எடுத்துச் சொல்லப்பட அவர்களிடம் மென்மேலும் இந்த ஜமாஅத்தில் இணைந்து செயல்பட ஆர்வம் மேலிட்டதைக் காண முடிந்தது.
இறுதியாக துஆவுடன் அமர்வு இனிதே நிறைவுபெற்றது!
அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்!