My Blogger TricksAll Blogger TricksTechtunes
Preview
ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 055-4481405, 055-3873002 , 050-8486296

கலைஞருக்கு TNTJ விவாத அழைப்பு!


கலைஞருக்கு TNTJ விவாத அழைப்பு!

ரிசானா விவகாரம் : கலைஞர் வைத்த வாதம் சரியா?

இலங்கை பெண்மணி ரிசானாவிற்கு சவூதி அரசு மரணதண்டனை அளித்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு இஸ்லாத்தை விமர்சிக்க இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இஸ்லாமிய விரோதிகள் இஸ்லாத்தின் மீது புழுதி வாரி வீசும் இந்நேரத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் இது குறித்து அறிக்கை ஒன்றை கடந்த 21.03.2013 அன்று வெளியிட்டுள்ளார்.

மரணதண்டனைக்கு முடிவு கட்ட உலக நாடுகள் ஒன்று சேர வேண்டும் என்ற தலைப்பில் அவரது அறிக்கை பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டுள்ளது.

தன்னை இலக்கியவாதி, முற்போக்குவாதி என்று சொல்லிக் கொள்ளும் மனுஷ்ய புத்திரன் என்பவர் நக்கீரன் இதழில் பொய்யின் மறுவடிவமாகவும், புளுகு மூட்டையின் மொத்த உருவமாகவும் எழுதிய கட்டுரையை மேற்கோள்காட்டி, அதையே தனது வாதத்திற்கு ஆதாரமாகக் காட்டி கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையைக் கண்டு நமக்கு ஆச்சர்யம்தான்.

மனுஷ்ய புத்திரன் என்பவர் தனது கட்டுரையில் எழுதிய செய்திகளை அப்படியே நம்பி அதையே தனது கட்டுரையிலும் எழுதி பொய்(யரு)க்கு உரம் சேர்த்துள்ள கலைஞரிடத்தில் சில கேள்விகள்:

ஒருவர் ஒரு செய்தியை சொல்கின்றார் என்றால் அதுகுறித்த செய்திகளை ஆய்வு செய்யாமலும், அதற்குரிய ஆதாரங்களைக் கேட்காமலும் அதை அப்படியே நம்பிவிடுவீர்களா?
அதற்கு ஆதாரம் எதையும் கேட்க மாட்டீர்களா? அதை ஆய்வு செய்ய மாட்டீர்களா?
உங்களைப் பற்றியும் உங்களது குடும்பத்தார் பற்றியும் ஜெயலலிதா விடக்கூடிய அறிக்கைகள் அனைத்தையும் அப்படியே நம்பி ஏற்று அதை ஆராயாமல், அதற்குரிய சான்றுகளைக் கேட்காமல் அதை உண்மை என்று சொல்லி மற்றவர்கள் உங்களைப் பற்றி ஜெயலலிதா விட்ட அறிக்கையை அப்படியே வெளியிட்டால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?

மேற்கண்ட கேள்விகளுக்கு கலைஞர் அவர்கள் நமக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளார்.

மனுஷ்ய புத்திரனது அனைத்து ஆதாரங்களும் பொய்கள்; புளுகு மூட்டைகள்; அவதூறுகள்; அநியாயங்கள் என்று அடுக்கடுக்கான சான்றுகளுடன் நாம் நிரூபித்துள்ளோம். அந்த சான்றுகளை கலைஞருக்கும் அனுப்பி வைத்துள்ளோம்.

ரிசானாவிற்கு அநியாயமாக மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பதுதான் கலைஞரின் வாதம். அந்த வாதத்திற்கு தனிக்கட்டுரையில் விரிவாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.

மனுஷ்ய புத்திரன் சொன்ன பொய்களைத் தவிர்த்துவிட்டுப்பார்த்தால் கலைஞர் தனது அறிக்கையில் கூடுதலாக ஒரேயொரு வாதத்தைத்தான் முன் வைத்துள்ளார்.

வண்ணாரப்பேட்டை சம்பவம் :

சென்னை வண்ணாரப்பேட்டையில் 3மாத குழந்தைக்கு அதன் தாய் பாலூட்டிய போது, அந்தக் குழந்தைக்கு பால் புரையேறி மூச்சுத்திணறி அது இறந்து விட்டது. இந்த சம்பவம் கலைஞரின் அறிக்கை வெளியாவதற்கு முந்தைய நாள் செய்தித்தாள்களில் வந்திருந்தது. அதைச் சுட்டிக்காட்டி இதுபோல ரிசானா பால் கொடுக்கும் போதும் பால் புரையேறி மூச்சுத்திணறி 4மாத குழந்தை இறந்திருக்கலாம் அல்லவா என்பதுதான் கலைஞரின் வாதம்.

இது எவ்வளவு பெரிய அபத்தமான வாதம்?. ஒரு குற்றச் செயல் சம்பந்தமாக பேசும்போது மற்றொரு விபத்தை அத்துடன் ஒப்பிட்டு பேசினால் அறிவுடையோர் அதை ஏற்றுக் கொள்வார்களா?

அந்த குற்றத்தை சம்பந்தப்பட்டவர் செய்தாரா? இல்லையா?
அதற்குரிய ஆதாரங்கள் என்ன?
அந்த ஆதாரங்கள் உண்மையானவையா?
இதைத்தானே அறிவுடையோர் ஆராய்வார்கள்.
இந்த அடிப்படை விஷயம் கலைஞருக்கு தெரியாததா?

ஒருவரை மாடியில் இருந்து கீழே தள்ளி ஒருவன் கொடூரமான முறையில் கொலை செய்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். அந்த கொலைகாரன் மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றத்திற்கு ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் தீர்ப்பளிப்பதுதான் அறிவுடையோர் செயல். அதைவிட்டுவிட்டு இந்த கொலைச் சம்பவம் உண்மையா இல்லையா என்பதை அன்றைய தினம் செய்தித்தாளில் வந்த செய்தியை வைத்து எந்த அறிவாளியும் முடிவு செய்யமாட்டார்.

இன்று நான் செய்தித்தாள் படித்தேன். அதில் இருவர் மொட்டை மாடியில் நின்று பேசிக்கொண்டிருந்த போது, ஒருவர் கால் தவறி கீழே விழுந்து செத்துவிட்டார் என்ற செய்தி அதில் இருந்தது. அதுபோல கொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்படுபவரும் கால் தவறி கீழே விழுந்து இறந்திருக்கலாம் அல்லவா? என்று யாராவது கேட்டால் அது எப்படி அறியாமையாக இருக்குமோ அதுபோலத்தான் கலைஞரின் வாதமும் அமைந்துள்ளது.

இது குறித்து கலைஞருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைவர் பீஜே அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். அதில், மரணதண்டனை கூடாது என்பது உங்களது கொள்கையாக இருக்குமானால், நீங்கள் கூறிய கருத்துக்கள் உண்மைதான் என்று சொல்வீர்களேயானால், மனுஷ்ய புத்திரன் கூறிய பொய்களில் உங்களுக்கு உடன்பாடு இருக்குமேயானால் அதை தக்க ஆதாரங்களுடன் மறுக்கும் எங்களிடத்தில் நீங்கள் விவாதிக்க முன்வரவேண்டும் என்று கலைஞருக்கு விவாத அழைப்பு விடப்பட்டுள்ளது. 

கடிதத்தை காண 
Click Here

source: onlinepj.com



மாவட்ட நிர்வாகிகள்!


----------------------------------------------------
மாவட்டத்தலைவர்
அஷ்ரப் அலி - 9894819930
புதுஆத்தூர்
----------------------------------------------------
மாவட்டதுணை தலைவர்
ஜாஹிர் ஹுசைன் - 9677353392
லெப்பைக்குடிக்காடு
----------------------------------------------------
மாவட்ட செயலாளர்
சபீர் அலி - 9943509442
V களத்தூர்
----------------------------------------------------
மாவட்ட துணை செயலாளர்
ராஜ் முஹம்மது - 9994328213
பெரம்பலூர்
----------------------------------------------------
மாவட்ட பொருளாளர்
ஷேக் தாவூத் - 9655461134
லெப்பைக்குடிக்காடு
----------------------------------------------------

UAE நிர்வாகிகள்!

தலைவர்
A.முஹம்மதுயாகூப்
00971 50 7890713
--------------------------------------
செயலாளர்
A.சபியுல்லாஹ்
00971504758106
--------------------------------------
பொருளாளர்
M.ஜாஹிர்உசேன்
00971 50 5301352
--------------------------------------

VKRகிளைநிர்வாகிகள்

தலைவர்
K.G.அஹமதுபாஷா
9843044145
--------------------------------------
துணை தலைவர்
A.முஹம்மது அலி
--------------------------------------
செயலாளர்
A.முஹம்மது இப்ராஹீம்
--------------------------------------
துணை செயலாளர்
இனையத்துள்ள
--------------------------------------
பொருளாளர்
அப்துல் ஜப்பார்
--------------------------------------
தொன்டர் அனி
M.ஜியவுல் ஹக்
--------------------------------------
மானவர் அனி
K.ஜாசிம் ரசூல்
--------------------------------------

தொடர்பு கொள்ள








Powered by vkalathurtntj.tk



© Copyright 2014. TNTJ VKR. All Rights Reserved. -- Designed by: TNTJ VKR -- Powered by the TNTJ V.KALATHUR