பெரம்பலூர் அரசு ஐ.டி.ஐ.யில் இலவச தொழிற்பயிற்சி
பெரம்பலூர், : பெரம்பலூர் அரசு ஐ.டி.ஐ.யில் இலவச தொழிற்பயிற்சி பெற இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய அரசு ஐ.டி.ஐ. முதல்வர் மஞ்சுளாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பெரம்பலூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் வெல்டர், பிட்டர் மற்றும் மின்சார பணியாளர் இலவச குறுகிய கால தொழிற்பயிற்சி (எஸ்.டி.ஐ.எம். இ.எஸ்.) கடந்த செப்டம்பர் மாதம் முதல் நடைபெற்று வருகிறது.
தினமும் 3 மணிநேரமும் அல்லது பயிற்சி பெறுபவர்களின் தேவையின் அடிப்படையில் பயிற்சி நேரம் நிர்ணயிக்கப்பட்டு மொத்தம் 120 மணிநேரம் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சி பெற குறைந்தபட்சம் கல்வி தகுதி 5ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 8ம்வகுப்பு தேர்ச்சி பெற்று 14 வயது பூர்த்தியடைந்த வயது வரம்பற்ற வகையில் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள்.
தினமும் 3 மணிநேரமும் அல்லது பயிற்சி பெறுபவர்களின் தேவையின் அடிப்படையில் பயிற்சி நேரம் நிர்ணயிக்கப்பட்டு மொத்தம் 120 மணிநேரம் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சி பெற குறைந்தபட்சம் கல்வி தகுதி 5ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 8ம்வகுப்பு தேர்ச்சி பெற்று 14 வயது பூர்த்தியடைந்த வயது வரம்பற்ற வகையில் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள்.
பயிற்சி முடித்தவர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் என்சிவிடி சான்றிதழ் வழங்கப்படும். மேலும் தகவல் பெற பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை தொடர்புகொண்டு இலவச பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம் அல்லது 04328-290590 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விவரங்கள் பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thanks
Dinakaran