Home
»
Posts filed under
பெரம்பலூர் மாவட்டம் TNTJ
மாவட்ட செயற்குழு கூட்டம் - ஜனவரி 2014
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் 12/01/2014 ஞாயிற்றுக்கிழமையன்று பெரம்பலூர் கிளை தவ்ஹீத் மர்கஸில் மாவட்ட தலைவர் அஸ்ரப் அலி அவர்களின் தலைமையில் மாவட்ட நிர்வாகிகளின் முன்னிலையில் நடைபெற்றது. இதில், மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
எதிர் வரும் ஜனவரி 28 க்காண பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு அதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது
Continue Reading...
வெளியூரிலிருந்து கால்நடைகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்: ஆட்சியர்
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் கோமாரி நோயிலிருந்து கால்நடைகளை பாதுகாக்க, வெளியூர்களிலிருந்து 2 மாதங்களுக்கு கால்நடைகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கோமாரி நோய், தொற்றுநோய் வைரஸ் கிருமிகளால் ஏற்படக் கூடியது. இந்த நோய் கால்நடைகளை தாக்காமல் இருக்க, இதுவரை 5 கட்ட தடுப்பூசி பணிகள் நிறைவடைந்துள்ளன. நோயானது, மழைக்காலங்களிலும், ஈரப்பதம் அதிகமுள்ள பகுதிகளிலும் வரக்கூடிய வாய்ப்புள்ளது. கால்நடைகள் உணவு சாப்பிடாமல், வாய் மற்றும் குளம்பில் புண் ஏற்பட்டால், கால்நடை மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை அளித்தால், ஒரு வாரத்துக்குள் நோய் குணமடைந்து விடும்.
இந்த நோய் தாக்கிய கால்நடைகள், அதன் கன்றுகளுக்கு பால்கொடுக்கும் போது கன்றுகள் உயிரிழக்க வாய்ப்புள்ளது. நோய்த் தாக்கிய கால்நடைகளை வேறு இடத்துக்கு கொண்டு செல்லாமல், வீட்டிலேயே வைத்து கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்து உரிய சிகிச்சை அளித்தால் கால்நடைகள் உயிரிழப்பதைத் தவிர்க்கலாம்.
மேலும், நோய்த் தொற்றுள்ள பகுதியிலிருந்து கால்நடைகளை வாங்கி வருவதன் மூலம் நோய் பரவ வாய்ப்புள்ளது.
எனவே, 2 மாதங்களுக்கு பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் வேறு மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து கால்நடைகளை வாங்க வேண்டாம். பெரம்பலூர் மாவட்டத்தில் கோமாரி நோய்த் தடுப்புப் பணியில் 18 குழு அமைக்கப்பட்டு, 19.9.2013 முதல் 10.10.2013 வரை, 1.15 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், காற்றில் பரவக்கூடியது என்பதால், நோயை கட்டுப்படுத்த அனைத்து ஏற்பாடுகளுடன் ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு மண்டல இணை இயக்குநர் அலுவலக சிறப்பறிஞர் தலைமையில், 24 பேர் அடங்கிய 8 குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.
Thanks
Dinamani
Continue Reading...
பெண்கள் பயான் - அரியலூர் கிளை
பெரம்பலூர் மாவட்டம் அரியலூர் கிளை சார்பாக கடந்த 02-02-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபௌஜியா அவர்கள் ”அல்லாஹ்வின் கருணை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் பலரும் ஆர்வத்துடன் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்...
Continue Reading...
பெண்கள் பயான் - முஹம்மது பட்டிணம்
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் முஹம்மது பட்டிணம் கிளை சார்பாக நேற்று 13/01/2013 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் மதினா ஆலிமா அவர்கள் முஸ்லிம் பெண்கள் என்ற தலைப்பில் உறையாற்றினார்கள் இதில் ஏறாளமான பெண்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்....
Continue Reading...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பெரம்பலூர் மாவட்டம்
மாவட்டத்தலைவர்
அஷ்ரப் அலி - 9894819930
புதுஆத்தூர்
மாவட்டதுணை தலைவர்
ஜாஹிர் ஹுசைன் - 9677353392
லெப்பைக்குடிக்காடு
மாவட்ட செயலாளர்
சபீர் அலி - 9943509442
V களத்தூர்
மாவட்ட துணை செயலாளர்
ராஜ் முஹம்மது - 9994328213
பெரம்பலூர்
மாவட்ட பொருளாளர்
ஷேக் தாவூத் - 9655461134
லெப்பைக்குடிக்காடு
06-01-2013 அன்று லெப்பைக்குடிக்காட்டில் நடைப்பெற்ற மாவட்ட செயற்குழுவின் அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்ட மாவட்ட நிர்வாகம்
Continue Reading...
அல்லாஹ்வின் பெயரால் 28.12.2012
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் - அமீரகத்தில் V.களத்தூர் ஊர் கூட்டமைப்பு (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்) பொறுப்பாளர்கள் தேர்வு அல்லாஹ்வின் கிருபையால் சிறப்பாக நடைபெற்றது.
இந்த பொறுப்பாளர்கள் தேர்வு மற்றும் ஆலோசனை கூட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் துபை மண்டல நிர்வாகி சகோ, இபுராஹிம் அவர்களும், லெப்பைகுடிக்காடு அமீரக பொறுப்பாளர் சகோ, முகையதீன் அவர்களும் முன்னிலை வகித்தனர்.
ஊரில் ஜமாத்தின் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அமீரகத்தில் உள்ள ஊர் வாசிகளை சந்தித்து நமது பணிகள் குறித்து எடுத்து சொல்லது எனவும் ஆலோசிக்கப்பட்டது.
கீழ்காணும் பொறுப்பாளர்கள் அமீரக ஒருங்கினைப்புக்காக தேர்வுசெய்யபட்டுள்ளார்கள்.
பொறுப்பாளர்கள்
தலைவர் - A.முஹம்மது யாகூப்
செயலாளர் - A.சபியுல்லாஹ்
பொருளாளர் - M.ஜாஹிர் உசேன்
28.12.02012 Tntj கூட்டத்தின் தீர்மானங்கள்
1) நிர்வாகிகள் தேர்ந்துதெடுக்கப்பட்டார்கள்
2)மாத சந்தாவாக (ஜனவரி மாதம் முதல் 01.01.2013) 10 Dh என நிர்ணயிக்கப்பட்டது.
3)V.களத்தூர் மர்கஸ்க்கு இமாம் வைப்பதாக முடிவுசெய்யபட்டுள்ளது.அதற்கு உண்டான பொறுப்புகளை துபை நிர்வாகம் ஏற்றுக்கொண்டது.
இன்றைய கூட்டத்தில் சுமார் 20 நபர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்!!!
Continue Reading...